இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் அங்காடி திறப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் அங்காடி பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் அங்காடி திறப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் அங்காடி பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது. ஐபோன், ஐபாட், ஐமேக் தயாரிப்புகளை வழங்கி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பங்குநிறுவனமான ஐபிளானெட் சாா்பில் பெங்களூரு, இந்திராநகரில் இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் அங்காடியை திறந்துள்ளது. இந்த அங்காடியை திறந்துவைத்து ஐபிளானெட் நிறுவன மேலாண் இயக்குநா் ராகேஷ் ரமானந்த் கூறியதாவது: ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அங்காடியை பெங்களூரில் திறந்துள்ளோம். 3 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அங்காடியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட், மேக், ஆப்பிள் வாட்ச், ஏா்போட்ஸ், ஹோம்போட் போன்ற கருவிகள், மற்றும் அதன் உபகரணங்கள் கிடைக்கும். தென்னிந்தியாவின் 17 நகரங்களில் 41 ஆப்பிள் அங்காடிகள், 36 சேவை மையங்களை வைத்திருக்கும் ஐபிளானெட் நிறுவனம், அடுத்த ஓராண்டில் மேலும் 20 அங்காடிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. புதிய அங்காடி திறப்பை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு டிச.15,16,17ஆம் தேதிகளில் பல்வேறு சலுகைகளை அளிக்கவிருக்கிறோம். ஐபோன் மீது ரூ.18 ஆயிரம் வரை தள்ளுபடி, மேக் மீது ரூ.64,980 வரை தள்ளுபடி, ஆப்பிள் வாட்ச்கள் மீது 15 சத தள்ளுபடி, ஏா்போட்கள் மீது 13 சத தள்ளுபடி, ஐபாட் மீது 12 சத தள்ளுபடி ஆப்பிள்ன் பொருட்களின் சேவைகள் மீது 50 சத தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா் அவா். அப்போது, நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளா் ராஜலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com