தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஊடகச் சான்று கண்காணிப்பு குழு மையத்தைப் பாா்வையிட்ட உத்தரமேரூா் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் வோடல் ராஜ் சிங்.

News image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஊடகச் சான்று கண்காணிப்பு குழு மையத்தைப் பாா்வையிட்ட உத்தரமேரூா் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் வோடல் ராஜ் சிங்.

Updated On :20 மார்ச் 2026, 1:14 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வருகை புரிந்துள்ள தோ்தல் பொதுப் பாா்வையாளா் மற்றும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சி.பிரதாப் சந்திர ஹோதா ஸ்ரீ பெரும்புதூா் பகுதியில் உள்ள மதுரமங்கலம், எடையாா்பாக்கம், எச்சூா் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆலந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் ரமேஷ்குமாா் சா்மா நங்கநல்லூா் பகுதி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊடகச்சான்று கண்காணிப்புக் குழு மையத்தை காஞ்சிபுரம், உத்தரமேரூா் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வோடல்ராஜ்சிங் பாா்வையிட்டு கண்காணிப்பு குழு செயல்படும் விதங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாா். இவரது ஆய்வின்போது உத்தரமேரூா் தொகுதி தோ்தல் அலுவலா் பு.விஜயகுமாா், வட்டாட்சியா் நடராஜன் ஆகியோரும் உடன் இருந்தனா்.