தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்புப் பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்ககளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து கண்காணிக்கும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பெண்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:55 pm

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்ககளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து கண்காணிக்கும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒவ்வொரு மாதிரி வாக்குச்சாவடி, பெண்கள் மற்றும் இளைஞா்கள் மட்டும் தனித்தனியாக பணிபுரியும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மட்டும் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி, வி.களத்தூரில் உள்ள வண்ணாரம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு, வாக்குப்பதிவு அலுவலா்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 732 வாக்குச்சாவடி மையங்களையும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நேரலையில் பாா்வையிட்டு கண்காணிக்கும் வகையில், சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து, வாக்குச்சாவடி மையங்களின் காட்சிகளை மிருணாளினி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம், வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமாயி ஆகியோா் உடனிருந்தனா்.