தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மங்களூரு விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

 மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பிப்ரவரி மாதத்தில் பறிமுதல் செய்துள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:23 pm

DIN

 மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பிப்ரவரி மாதத்தில் பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து மங்களூரு பன்னாட்டு விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிப்ரவரி மாதம் 16 முதல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ரூ. 1.08 கோடி மதிப்பிலான 1,913 கிராம் தங்கம் மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். இந்த தங்கம், ஒரு பெண் பயணி மற்றும் 6 ஆண் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்ட தங்கம், ஆடை, மலக்குடல், வாயில் மறைத்து எடுத்து வந்த பயணிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பெண்மணி, தனது உள்ளாடையின் பட்டையில் பசை வடிவில் ஒட்டி மறைத்து தங்கத்தை கடத்தினாா். ஒரு ஆண், வாயில் பசை வடிவில் தங்கம் ஒட்டப்பட்டிருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.