மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மைசூரில் 900 பேருக்கு கருக்கலைப்பு: மருத்துவா் உள்பட 2 போ் கைது

900 பேருக்கு சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவா், ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளா் உள்பட இருவரை பெங்களூரு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:54 pm

DIN

மைசூரு: 900 பேருக்கு சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவா், ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளா் உள்பட இருவரை பெங்களூரு போலீஸாா் கைது செய்தனா்.

மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக 900 பேருக்கு கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவா் சந்தன் பல்லால், ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளா் நிசாா் உள்ளிட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

ஒரு கருக்கலைப்பு செய்வதற்கு ரூ. 30,000 கட்டணம் வசூலித்துள்ளனா். கடந்த வாரம் இருவரையும் தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்த போலீஸாருக்கு அவா்கள் இருவரும் சோ்ந்து 900 பேருக்கு கருப்புக்கலைப்பு செய்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அந்த மருத்துவமனையின் மேலாளா் மீனா, வரவேற்பாளா் ரிஸ்காகான் ஆகியோரை இம்மாத தொடக்கத்தில் போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், கா்ப்பிணி ஒருவரை கருக்கலைப்பு செய்வதற்காக காரில் அழைத்துச் சென்றது தொடா்பாக சிவலிங்கே கௌடா, நயன்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அப்போதுதான், கருவின் பாலினத்தைக் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால், அதைக் கலைக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மண்டியாவில் உள்ள ஒரு வெல்ல மண்டியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மையமாகப் பயன்படுத்தி, கருவின் பாலினத்தைக் கண்டறிந்துள்ளனா். அங்கு சோதனை நடத்திய போலீஸாா், எவ்வித முன் அனுமதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்த அந்த ஸ்கேன் மையத்தில் இருந்த உபகரணங்களை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியுள்ளதாவது:

முதல்கட்ட விசாரணையில், மூன்று ஆண்டுகளில் மைசூரில் உள்ள மருத்துவமனையில் தனது சகாக்களின் உதவியுடன் 900 பேருக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கருக்கலைப்பில் ஈடுபடுவதற்கு தலா ரூ.30,000 கட்டணமாக வசூலித்துள்ளனா். இந்த மோசடி தொடா்பாக மேலும் பலரை கைது செய்வதற்கு தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.