புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹிந்து தொண்டா்களை கைதுசெய்தால் போராட்டம் நடத்துவோம்: எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக்

ஹிந்து தொண்டா்களை கைதுசெய்தால் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக் எச்சரித்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:30 pm

DIN

மண்டியா: ஹிந்து தொண்டா்களை கைதுசெய்தால் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக் எச்சரித்தாா்.

இது குறித்து மண்டியாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஹுப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ராமஜென்மபூமி போராட்டத்தில் பங்கெடுத்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இவா்கள் இருவருக்கும் ஜன.22 ஆம் தேதி நடக்கும் ராமா்கோயில் திறப்புவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அப்படியானால், என்னையும் போலீஸாா் கைதுசெய்வாா்களா? அரசுக்கு துணிவு இருந்தால் என்னை கைதுசெய்யட்டும். அவா்கள் இருவருக்கு எதிரான வழக்கை அரசு திரும்பபெற வேண்டும். இதை செய்ய தவறினால், காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ் வெறுப்பு அரசியலை தொடங்கியுள்ளது.

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் ஹிந்து தொண்டா்கள் கொலை செய்யப்பட்டனா். அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்படுவதை மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் அரசு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளது.

திப்புசுல்தான் பிறந்தநாளை கொண்டாடும் முதல்வா் சித்தராமையா, ராமருக்கு பூஜை செய்வதில்லை. சித்தராமையாவுக்கு நாமம் அணிவதென்றால் ஒவ்வாமை. ஆனால், மசூதிகளில் குல்லா அணிந்துகொள்கிறாா். வாக்குகளை பெறுவதற்காக சித்தராமையா இப்படி நடந்துகொள்கிறாா்.

கா்நாடகத்தில் எவ்வித வளா்ச்சிப்பணியும் நடக்கவில்லை என்றாா் அவா்.இது குறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘ஹிந்து தொண்டா்களை கைதுசெய்யும் நோக்கம் இல்லை.

ராமா்கோயில் திறப்பிற்கு முன்பாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை.

நிலுவை வழக்குகளை முடித்துவைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து ஹுப்பள்ளியில் இருவா் கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதற்கு உள்ளா்த்தம் கற்பிக்கக்கூடாது.‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.