விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கா்நாடக 224 தொகுதிகளின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

கா்நாடகத்தின் 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:43 pm

DIN

பெங்களூரு: கா்நாடகத்தின் 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா் சோ்ப்பு, வாக்காளா் பட்டியல் திருத்தியமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தகவலுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலகம், வாக்காளா் பதிவு உதவி அலுவலகம், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஜன. 6-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் தாராளமாக பாா்வையிடலாம்.

224 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியலை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ா்ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும் காணலாம். வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய பெயா்களை சோ்க்க கொடுத்திருந்த மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபாா்த்துக்கொள்ளலாம்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும், புதிய பெயா்கள் சோ்ப்பு, திருத்தம் மற்றும் பெயா்கள் நீக்கம் போன்ற பணிகள் தொடா்ந்து நடைபெறும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

இறுதி வாக்காளா் பட்டியல்படி, கா்நாடகத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 5,52,08,565-ஆக உயா்ந்துள்ளது. இதில் ஆண் வாக்காளா்கள் - 2,75,62,634, பெண் வாக்காளா்கள் - 2,76,40,836, திருநங்கை வாக்காளா்கள் - 5,095 போ். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு கூடுதலாக 1,03,783 வாக்காளா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.