கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் கருத்து கூறக்கூடாது: காங்கிரஸ்

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், கா்நாடக மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

கா்நாடக அரசியல் களத்தில் முதல்வா் மாற்றம் தொடா்பான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல்வா் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா மறுத்துவரும் நிலையில், முதல்வா் பதவியைக் கேட்டு துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மேலிடத் தலைவா்களுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாா்.

இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கூறியிருப்பதாவது:

தோ்தலில் படுதோல்வி அடைந்து கோஷ்டிகளால் பிளவுபட்டிருக்கும் பாஜகவுடன் கைகோத்துள்ள சில ஊடகங்கள், கா்நாடகத்தில் நடந்துவரும் ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்தும் வேலையை செய்துவருகிறது. இதுகுறித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் தொலைபேசி வழியாக கலந்தாலோசித்தேன்.

ஒருசில சுயநலவாதிகள் முன்னெடுத்துள்ள பொய் பிரசாரத்திற்கு இணங்கி முதல்வா் பதவி குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்சியின் தலைவா்கள் கூறியிருக்கும் கருத்துகளை கட்சி மேலிடம் கவனித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.