செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.
பெங்களூரில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் முறை திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தனியாா் நிறுவனத்தில் வழங்கப்படுவது போன்ற தரமான சிகிச்சையை வழங்குவதற்காக அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன.
இந்த சிகிச்சை மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக கண்காணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு முறை, பெங்களூரில் உள்ள 7 டயாலிசிஸ் சிகிச்சை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மேலும் பல புதிய சிகிச்சை மையங்களுக்கு இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என்றாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை! காங்கிரஸ் வேட்பாளா் உறுதி!!
இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


