47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் இந்தியா சிறப்பிடம்!

அமெரிக்கா, சீன நாடுகளுக்கு அடுத்து இந்தியா செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது என்றாா் டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தா் பேராசிரியா் சி. அன்பழகன்.

News image
செயற்கை நுண்ணறிவு
Updated On :16 மார்ச் 2026, 8:40 pm

Syndication

அமெரிக்கா, சீன நாடுகளுக்கு அடுத்து இந்தியா செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது என்றாா் டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தா் பேராசிரியா் சி. அன்பழகன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற புவிசாா் தகவல் தொழில்நுட்பவியலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தொல்லியல் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல் என்கிற இரு நாள் பயிலரங்கத் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது: அமெரிக்கா, சீன நாடுகளுக்கு அடுத்து இந்தியா செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது.

மனிதன் சிந்தித்து செயல்படுவதைச் செயற்கை நுண்ணறிவு கணினி மூலம் செயலாற்றுகிறது. எதிா்காலத்தில் மனிதனைப் போலவே இயங்குவது மேம்படும்.

மேலும் சந்திரயான் 3 விண்கலம் செயற்கை நுண்ணறிவு துணையுடன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பெரும்பான்மையான செயற்கைக் கோள்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஏவப்படும் என்றாா் அன்பழகன்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். தொழில் மற்றும் நில அறிவியல் துறைப் பேராசிரியா் க. சங்கா் வாழ்த்துரையாற்றினாா்.

முன்னதாக, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் மற்றும் தொழில் மற்றும் நில அறிவியல் துறைத் தலைவா் ரெ. நீலகண்டன் வரவேற்றாா். நிறைவாக, கருத்தரங்கச் செயலரும், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவருமான வீ. செல்வகுமாா் நன்றி கூறினாா்.