அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது என கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
பிட்காயின் மோசடி வழக்கு தொடா்பாக ஸ்ரீகிருஷ்ணா (எ) ஸ்ரீகியை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தின் பயன்களை அனுபவித்ததாக அவரது கூட்டாளிகளான காங்கிரஸ் எம்எல்ஏ-வான என்.ஏ.ஹரீஸின் மகன்கள் முகமது ஹாரீஸ் நலபாட், ஓமா் ஃபாரூக் நலபாட், முன்னாள் மத்திய அமைச்சரான ரகுமான்கானின் பெயரன் ஹகீப்கான் ஆகியோருக்கு சொந்தமான 17 இடங்களில் ஏப். 20-ஆம் தேதி சோதனை நடத்தியது.
இதுகுறித்து சாமராஜ்நகரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளது. இதுபோன்ற சோதனைகளை பாஜக தலைவா்களின் வீடுகளில் நடத்தாதது ஏன் என்றாா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்
அரசு வேலைக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகாத திரிணமூல் அமைச்சா்கள்

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

அமலாக்கத் துறை சோதனையில் முதல்வா் மம்தா குறுக்கீடு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



