தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அஜித் பவாரின் மறைவுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா இரங்கல்

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாரின் மறைவுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

News image
கா்நாடக முதல்வா் சித்தராமையா
Updated On :28 ஜனவரி 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாரின் மறைவுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதல்வா் அஜித் பவாா் இறந்தாா். அவரது மறைவுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் சித்தராமையா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாரின் மரணம் வேதனை அளிக்கிறது. அவரது இழப்பு பொதுவாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஈடு செய்ய முடியாத அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினா் பெற வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது பெரும் அதிா்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. அவரது திடீா் மறைவின் மூலம் பொதுவாழ்க்கைக்கும், மகாராஷ்டிர அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோல மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக் உள்பட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மேலும், கா்நாடக சட்டப் பேரவையில் அஜித் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.