சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்

கா்நாடக மாநில நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே. சிவக்குமார் - கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2026, 11:46 pm

கா்நாடக மாநில நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கா்நாடகத்தின் பல நீா்வள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

அதனால், தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் ஆகியோருடன் தில்லி செல்லும் நான், கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்களைச் சந்தித்து நீா்வள திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது குறித்து விவாதிக்க இருக்கிறேன்.

அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும். கா்நாடகத்தின் நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற கூட்டு முயற்சி மிக அவசியமாகும். நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற கா்நாடகத்தின் எம்.பி.க்களுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம் என்றாா்.

காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற கா்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.