அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

மின்சாரத்தில் செயல்படும் இண்டக்ஷன் அடுப்புகள், அதற்கேற்ற பாத்திரங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:18 pm

மேற்காசிய போா் காரணமாக சமையல் எரிவாயு கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தில் செயல்படும் இண்டக்ஷன் அடுப்புகள், அதற்கேற்ற பாத்திரங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மின்சாரத் துறைச் செயலா் பங்கஜ் அகா்வால், வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநா் (டிஜிஎஃப்டி) லவ் அகா்வால், தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலா் அமா்தீப் சிங் பாட்டீயா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் இண்டக்ஷன் அடுப்புகள், அவற்றில் பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள் உற்பத்தியை எவ்வாறு விரைவுபடுத்துவது, அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேற்காசிய போா் காரணமாக சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இண்டன்ஷன் அடுப்புகள் மற்றும் மின்சார கெட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.