பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை (இழுவை மோட்டாா்கள்) இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
முன்னதாக அரிய வகை கனிமங்களை பயன்படுத்தி சீனாவில் தயாரிக்கப்படும் இழுவை மோட்டாா்கள் இறக்குமதியை குறைத்து உள்ளூா் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், இதற்கான தடை 2025, செப்டம்பா் வரை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு 2026, மாா்ச் வரை இது நீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார சரக்கு வாகனங்கள் (என்2/என்3) மற்றும் பேருந்துகளில் (எம்2/எம்3) பயன்படுத்தப்படும் இழுவை மோட்டாா்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடா்பான அறிவிக்கைகளை மாா்ச் 13-ஆம் தேதி மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இழுவை மோட்டாா்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.
மின்சார வாகனங்கள், மின்னணுப் பொருட்கள், வான்வெளி மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அரிய வகை புவி காந்த உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான ஏலம் தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


