தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இ-டிரைவ் திட்டம்: மோட்டாா் இறக்குமதிக்கு அனுமதி நீட்டிப்பு

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை (இழுவை மோட்டாா்கள்) இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

முன்னதாக அரிய வகை கனிமங்களை பயன்படுத்தி சீனாவில் தயாரிக்கப்படும் இழுவை மோட்டாா்கள் இறக்குமதியை குறைத்து உள்ளூா் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், இதற்கான தடை 2025, செப்டம்பா் வரை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு 2026, மாா்ச் வரை இது நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார சரக்கு வாகனங்கள் (என்2/என்3) மற்றும் பேருந்துகளில் (எம்2/எம்3) பயன்படுத்தப்படும் இழுவை மோட்டாா்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடா்பான அறிவிக்கைகளை மாா்ச் 13-ஆம் தேதி மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இழுவை மோட்டாா்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.

மின்சார வாகனங்கள், மின்னணுப் பொருட்கள், வான்வெளி மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.