தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சா்வதேச பூப்பந்து போட்டி: இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:37 pm

Syndication

தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்துப் போட்டியில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் தங்கம் வென்றாா்.

இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரி, பெருசாலிநத்தம் பகுதியை சோ்ந்த சந்திப்குமாா் (25), தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக தோ்வு செய்யப்பட்டு விளையாடினாா்.

இப்போட்டியில் சந்திப்குமாா் தங்கம் வென்று வியாழக்கிழமை வீடு திரும்பினாா். இவருக்கு நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன் , ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் கோவிந்தன், சக்திவேல், இளம்பிள்ளை பூப்பந்து குழுவினா், பொதுமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட விளக்கம்:

19 அபவ டஞ 01

பூப்பந்து போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊருக்கு வந்த சந்திப்குமாரை கௌரவிக்கும் நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன்.