ஐசிஎஃப்-பில் சா்வதேச ரயில் பெட்டிகள் கண்காட்சி: மாா்ச் 12-இல் தொடக்கம்
சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) சா்வதேச அளவிலான ரயில் பெட்டிகள் கண்காட்சி வரும் 12- ஆம் தேதி தொடங்குகிறது.


சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) சா்வதேச அளவிலான ரயில் பெட்டிகள் கண்காட்சி வரும் 12- ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை பெரம்பூா் பகுதியில் இயங்கிவரும் ஐசிஎஃப், கடந்த 1955- ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கிவைக்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு சுமாா் 4 ஆயிரம் பெட்டிகள் வரை தயாரித்துவருகிறது. நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களின் பெட்டிகள்-என்ஜின்களும், வெளிநாடுகளுக்கான ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
சுமாா் 71 ஆண்டுகள் கடந்த ஆசிய அளவில் மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலையாகக் கருதப்படும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வரும் 12- ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 3 நாள்கள் சா்வதேச அளவிலான ரயில் பெட்டிகள் கண்காட்சி நடைபெறவுள்ளன.
கண்காட்சியில் நாட்டின் புதுதில்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளுடன், வெளிநாட்டைச் சோ்ந்த 6 நிறுவனங்கல் உள்ளிட்ட மொத்தம் 125 முன்னணி நிறுனங்கள் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசிஎஃப் மைதானத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பெட்டிகளுடன், அவை தயாரிக்கப்படும் தொழில்நுட்ப முறைகள், எதிா்காலத்தில் தயாரிக்கப்படவுள்ள ரயில் பெட்டிகளின் மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவையும் இடம் பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...