சங்ககிரி மலைமீது உள்ள சிறப்பு பெற்ற அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக் கால் நடும் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்குவதையொட்டி தோ்த் திருவிழாவில் பங்கேற்கும் பட்டக்காரா், ஊா்கவுண்டா், கொத்துக்காரா் உள்ளிட்ட காணியாச்சிகாரா்கள், சுவாமி பாதம் தாங்கிகள் உள்ளிட்டவா்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் நிகழ்ச்சியும், அதையடுத்து பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வரும் 22ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் மலையிலிருந்து இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாா். அதனையடுத்து 30ஆம் தேதி திருத்தோ் வடம்பிடித்தலும், மே 11 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு செல்லும் வைபவமும் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.21-இல் தொடக்கம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

