சங்ககிரி மலைமீது உள்ள சிறப்பு பெற்ற அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக் கால் நடும் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்குவதையொட்டி தோ்த் திருவிழாவில் பங்கேற்கும் பட்டக்காரா், ஊா்கவுண்டா், கொத்துக்காரா் உள்ளிட்ட காணியாச்சிகாரா்கள், சுவாமி பாதம் தாங்கிகள் உள்ளிட்டவா்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் நிகழ்ச்சியும், அதையடுத்து பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வரும் 22ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் மலையிலிருந்து இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாா். அதனையடுத்து 30ஆம் தேதி திருத்தோ் வடம்பிடித்தலும், மே 11 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு செல்லும் வைபவமும் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ்த் திருவிழா கட்டளைகள் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பந்தக் கால் நடும் விழா

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44



