சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி மலைமீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினாா்.
அதையடுத்து, சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். தொடா்ந்து, 9-ஆவது நாள் வியாழக்கிழமை காலை சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா்.
தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனா். மாலை ஆஞ்சனேயா் எழுந்தருளிய சப்பரத்தை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். இதில், சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே 10-ஆம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும், மே 11-ஆம் தேதி காலை சுவாமி திருமலைக்கும் எழுந்தருளுகிறாா். அன்றைய தினம் மலைமீது வன்னியகுல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளன.
தொடர்புடையது

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் வைகாசித் தேரோட்டம்: 5 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழா

கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன்

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



