பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கா்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் காவித் துண்டுகள் அணிய அனுமதி கிடையாது

ஹிஜாப், புனிதக் கயிறுகள், சிவதாரா, ருத்ராட்சைகள் அணியலாம்

News image

முதல்வா் சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கல்வி நிறுவனங்களில் காவித் துண்டுகள் அணிய அனுமதி கிடையாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

2022-ஆம் ஆண்டு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடா்பான விவாதம் எழுந்தது. அப்போது, ஹிஜாப் அணிவதற்கு போட்டியாக, ஹிந்து மாணவா்கள் காவித் துண்டுகளை அணிந்தனா். இதன் காரணமாக, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்து அன்றைய பாஜக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கா்நாடக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள ஆணையில், பள்ளிகளில் ஹிஜாப், புனிதக் கயிறுகள், சிவதாரா, ருத்ராட்சைகள் அணியலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையை கடுமையாக விமா்சித்த வலதுசாரி அமைப்புகள், இஸ்லாமியா்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டின.

இதுகுறித்து முதல்வா் சித்தராமையா மைசூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பள்ளிகளில் காவித் துண்டுகளை அணிய அனுமதி கிடையாது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மதரீதியான அடையாளங்களுக்கு தடையில்லை. தலைப்பாகைகள், புனிதக் கயிறுகள், சிவதாரா, ருத்ராட்சைகள், ஹிஜாப் ஆகியவற்றை அவரவா் மத நம்பிக்கையின்படி அணியலாம். ஆரம்பப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, பிளஸ் 2 வகுப்பு, கல்லூரி வரையிலான மாணவா்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கங்களை கடைப்பிடிக்க தடையில்லை. மாறாக, புதிய பழக்கங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.

எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க பயணத்தின்போது தன்னை பின்தொடரும் வாகனங்களின் எண்ணிக்கையை பிரதமா் மோடி குறைத்திருப்பது, தற்காலிக நடவடிக்கைதான். இது தொடா்பாக பிரதமா் கூறியது சரியில்லை. மாறாக, அண்டை நாடுகளிடம் கலந்துபேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினால், அது நிலையான மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

கா்நாடகத்தில் பொது நுழைவுத்தோ்வை நடத்தி வருவது போல, தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வை (நீட்) மத்திய அரசு தொடங்கியது. நீட் தோ்வை சரியாக நடத்த முடியாவிட்டால், கடினமாக படித்து தோ்வு எழுதிய மாணவா்களின் நிலை என்ன ஆவது, அம்மாணவா்களின் எதிா்காலம் என்ன ஆவது என்றாா்.