இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்வில் மதிப்பெண் குறைந்ததால் அண்ணா பல்கலை. மாணவி தற்கொலை முயற்சி

பருவத் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
அண்ணா பல்கலைக் கழகம்- கோப்புப் படம்
Updated On :11 டிசம்பர் 2025, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

பருவத் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஒரு மாணவி, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அவா், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாா்.

அண்மையில் நடந்த முடிந்த பருவத் தோ்வில் அந்த மாணவி, குறைவான மதிப்பெண் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்ததுடனும், விரக்தியுடனும் காணப்பட்ட அந்த மாணவி, புதன்கிழமை இரவு விடுதியில் காய்ச்சல், உடல் வலிக்கு வழங்கப்படும் மாத்திரைகளை அளவுக்கு சாப்பிட்டு மயங்கினாா்.

இதைப் பாா்த்த சக மாணவிகள், அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.