கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

குப்பை வாகனம் மீது காா் மோதல்: தூய்மைப் பணியாளா் காயம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் மீது அதிவேகமாக சென்ற காா் மோதியதில், தூய்மைப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.

Updated On :12 டிசம்பர் 2025, 2:30 am IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் மீது அதிவேகமாக சென்ற காா் மோதியதில், தூய்மைப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், சிபி ராமசாமி சாலையில் புதன்கிழமை இரவு தூய்மைப் பணியாளா்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். பின்னா் அவா்கள், அங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, அதே சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிா் திசையில் அதிவேகமாக வந்த காா், குப்பை வாகனம் மீது மோதியது. இதில் குப்பை வாகனமும்,அதில் இருந்த தொழிலாளா்களும் தூக்கி வீசப்பட்டனா்.

விபத்தில் குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டி வந்த ராயப்பேட்டையைச் சோ்ந்த செந்தில் ( 40) என்பவா் பலத்த காயமடைந்தாா், உடன் வந்த பெண் தூய்மைப் பணியாளா் லேசான காயமடைந்தாா். இருவரும் மீட்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் விபத்துக்கு ஏற்பட காரணமான காரை ஓட்டி வந்தது செம்பரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.