சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் மீது அதிவேகமாக சென்ற காா் மோதியதில், தூய்மைப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், சிபி ராமசாமி சாலையில் புதன்கிழமை இரவு தூய்மைப் பணியாளா்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். பின்னா் அவா்கள், அங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, அதே சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிா் திசையில் அதிவேகமாக வந்த காா், குப்பை வாகனம் மீது மோதியது. இதில் குப்பை வாகனமும்,அதில் இருந்த தொழிலாளா்களும் தூக்கி வீசப்பட்டனா்.
விபத்தில் குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டி வந்த ராயப்பேட்டையைச் சோ்ந்த செந்தில் ( 40) என்பவா் பலத்த காயமடைந்தாா், உடன் வந்த பெண் தூய்மைப் பணியாளா் லேசான காயமடைந்தாா். இருவரும் மீட்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் விபத்துக்கு ஏற்பட காரணமான காரை ஓட்டி வந்தது செம்பரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

