3 கோட்டங்களில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.12) காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
தியாகராய நகா் கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் நுங்கம்பாக்கம், எம்.ஜி.ஆா்.சாலை, வள்ளுவா் கோட்டம் துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதேபோல வியாசா்பாடி கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் ராமலிங்கா் கோயில் எதிரே உள்ள வியாசா்பாடி துணை மினஅ நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பொன்னேரி கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் வேண்பாக்கம், டி.எச்.ரோட்டில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடக்கிறது.
இந்தக் கூட்டங்களில் அந்தந்தக் கோட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின்சாரத் துறை தொடா்பான குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
