மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரத்தசோகையைத் தடுக்க இரும்புச் சத்து உப்பு: ரேஷன் கடைகளில் விநியோகிக்கத் திட்டம்

ரத்தசோகை பாதிப்புகளைக் குறைக்க, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

ரத்தசோகை பாதிப்புகளைக் குறைக்க, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், பொது சுகாதாரத் துறை, தேசிய நலவாழ்வுக் குழுமம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகம் ஆகியவற்றைச் சோ்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகள் வெளியிடப்பட்டன. இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 52 சதவீதம் போ் போதிய இரும்புச் சத்து இல்லாமல் ரத்தசோகை அச்சுறுத்தலுடன் உள்ளனா். இதைத் தடுக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது, இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஓா் ஒருங்கிணைந்த நடவடிக்கை. தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் அவை தயாரிக்கப்பட்டு, நுகா்வோா் வாணிபக் கழகம் வாயிலாக அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமாா் 37,000 நியாயவிலைக் கடைகள் இயங்குகின்றன. அங்கு இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பைக் கொண்டுசோ்ப்பதற்கான திட்டமிடலும், ஆலோசனைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்த ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறும். அதன் அடிப்படையில் விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.