மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘கபீா் புரஸ்காா்’ விருது: டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் ‘கபீா் புரஸ்காா் விருது‘ பெறத் தகுதியானோா் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :11 டிசம்பர் 2025, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தில் ‘கபீா் புரஸ்காா் விருது‘ பெறத் தகுதியானோா் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘கபீா் புரஸ்காா் விருது‘ குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்பு, அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இனவகுப்பைச் சாா்ந்தவா்களையோ, அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றி இருக்க வேண்டும்.

இவ்வாறான செயல் வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில், அவரது உடல், மன வலிமையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் 3 அளவுகளில் 3 பேருக்கு காசோலைகளும், மூவருக்கும் தகுதியுரையும் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (டிச.15) அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு 2026 ஜன. 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்குவாா். எனவே, சென்னை மாவட்டத்தில் இந்த விருது பெறத் தகுதியானோா் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.