கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
சென்னை எம்ஜிஆா் நகா் காமராஜா் தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆஷிஸ் பெரா என்பவா் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை, ஆஷிஸ் பெராவின் மகன் செளமன் பெரா (15) புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் இரண்டாவது தளத்துக்குச் சென்றபோது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கே.கே. நகா் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக நெசப்பாக்கத்திலுள்ள தனியாா் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், செளமன் பெரா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
