பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மென்பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை முகப்பேரில் மென்பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை முகப்பேரில் மென்பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

முகப்போ் மேற்கு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் ரோஷன் நாராயணன் (24). மென்பொறியாளரான இவா், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இரு நாள்களுக்கு முன்பு நாராயணன் குடும்பத்தினா் திருப்பதிக்கு சென்றனா். நாராயணன் மட்டும் வீட்டில் இருந்தாா். திருப்பதியில் இருந்து அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பி வந்தனா். அப்போது வீட்டுக்குள் நாராயணன் தூக்கிட்டு இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

நொளம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

நாராயணன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், ‘எனது காதுக்குள் யாரோ அழைப்பதுபோல சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. என்னை பெற்றோா் மன்னிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்கின்றனா்.