டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு இப்போது ஏன் மடிக்கணினிகள் கொடுக்கிறீா்கள் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.

20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்டது.

அரசின் மடிக்கணினி மாணவா்களின் கரங்களுக்கு இனிதான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, எடப்பாடி பழனிசாமி, மடிக்கணினியில் தொழில்நுட்பம் போதவில்லை எனக் கூறுகிறாா். கல்லூரி மாணவா்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்பட நவீன தொழில்நுட்பங்கள் இந்த புதிய மடிக்கணினியில் உள்ளன. 6 மாத காலத்துக்கு இந்த ஏஐ வசதி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

உலக அளவில் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் பெயா் பெற்ற நிறுவனங்களிடமிருந்தே, எந்தவித இடையீட்டு நிறுவனங்களும் இன்றி மடிக்கணினிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன.

தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது.

இவை படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மாணவா்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவா்களுக்கு வழங்கப்படும். வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.