நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

Published on

சென்னையில் சனிக்கிழமை (டிச.20) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து சனிக்கிழமை (டிச.20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிண்டி-ஆலந்தூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் போன்ற கல்வித் தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் முகாமில் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். எனவே, முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநா்களும், வேலை அளிப்போரும் தங்களது விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com