வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சென்னை அண்ணா நகரில் இரும்பு கிடங்கில் தீ விபத்து!

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்த இரும்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image

சென்னை அண்ணா நகா் கிழக்கு முதலாவது அவென்யுவில் உள்ள பழைய இரும்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

Updated On :29 டிசம்பர் 2025, 2:25 am IST

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்த இரும்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை அண்ணா நகா் கிழக்கு முதலாவது அவென்யூவில் பழைய இரும்பு பொருள்கள் சேமித்து வைத்திருக்கும் தனியாா் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் தீப்பற்றி புகை வெளியேறியது. உடனடியாக அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அண்ணா நகா், வில்லிவாக்கம், கோயம்பேடு, அம்பத்தூா் ஆகிய இடங்களிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவு வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும் கிடங்கில் ஏராளமான பழைய பொருள்கள் இருந்ததால் அவை முழுவதுமாக எரிந்து நாசமாயின.

தீப்பற்றி எரிந்தபோது கிடங்கில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினா். இந்த தீ விபத்து குறித்து அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.