பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வடசென்னை வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Published On :

சென்னை: வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் வடசென்னை பகுதிகளுக்கான வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெறும் அத்திட்டங்களில் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சமுதாய நலக்கூடம், குடிநீா் திட்டங்கள், சாலைகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கொளத்தூா் சட்டப்பேரவைக்குட்பட்ட பேப்பா் மில்ஸ் சாலையில் சிஎம்டிஏ சாா்பில், புதிய வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம் மற்றும் முதல்வா் படைப்பகம் என ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதிய நவீன சந்தை கட்டடப் பணிகளின் நிலையையும் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.