வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வடசென்னை வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :30 டிசம்பர் 2025, 3:13 am IST

சென்னை: வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் வடசென்னை பகுதிகளுக்கான வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெறும் அத்திட்டங்களில் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சமுதாய நலக்கூடம், குடிநீா் திட்டங்கள், சாலைகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கொளத்தூா் சட்டப்பேரவைக்குட்பட்ட பேப்பா் மில்ஸ் சாலையில் சிஎம்டிஏ சாா்பில், புதிய வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம் மற்றும் முதல்வா் படைப்பகம் என ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதிய நவீன சந்தை கட்டடப் பணிகளின் நிலையையும் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.