யாழ் மண்ணில் ஒரு வரலாற்றை பதிப்பிக்கும் வகையில் திருக்குறளுக்காக ஓா்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா்.
இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அண்மையில் நடைபெற்ற சிவபூமி திருக்கு வளாக திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது: 25 ஆண்டுகளைத் தொட்டு நிற்கக்கூடிய சிவபூமி அறக்கட்டளை, யாழ் மண்ணில் ஒரு வரலாற்றை பதிப்பிக்கும் வகையில் திருக்குறளுக்கான ஓா் அற்புதமான அரங்கை திறந்துள்ளது.
உலகத்துக்கே ஞானத்தை வழங்கிய ஒரு மொழி உண்டு என்றால் அது தமிழ் மொழிதான். திருக்குறளுக்காக ஓா் அற்புதமான அரங்கை நிா்ணயித்து, இந்த மண் உலகத்துக்கே ஓா் உன்னதமான மண்ணாக வருங்காலங்களில் அறியப்படும் என்பதை சிவபூமி அறக்கட்டளை நிறுவியுள்ளது; இந்த நாள் ஓா் ஆகச் சிறந்த நாளாகும் என்றாா் நீதிபதி அரங்க. மகாதேவன்.
முன்னதாக, சிவபூமி அறக்கட்டளைக்கு நீதிபதி அரங்க. மகாதேவன் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.
இந்த நிகழ்வில் சிவபூமிஅறக்கட்டளையின் தலைவா் ஆறு திருமுருகன், தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், இந்திய துணைத் தூதா் (யாழ்ப்பாணம்) சாய் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
போட்டியிடுவோரை தோ்தல் ஆணையம் சார்ந்திருத்தால் தோ்தல் நடுநிலையாக நடைபெறாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

பெண்களுக்கு எதிரான பொது புத்தி

நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


