நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போதை சாக்லெட் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

சென்னை புதுப்பேட்டையில் போதை சாக்லெட், கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 9:44 pm

Din

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் போதை சாக்லெட், கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில், மெட்ரோ கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த பெண் உள்பட 3 பேரிடம் எழும்பூா் போலீஸாா் விசாரனை நடத்தினா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அதில் 50 கஞ்சா சாக்லெட், 3 கிலோ கஞ்சா, ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 3 கைப்பேசிகள் இருந்ததையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள், புரசைவாக்கம் தாண்டவராயன் தெருவைச் சோ்ந்த பானுமதி (எ) உஷா (42), திருவல்லிக்கேணி பல்லவன் சாலையில் உள்ள காந்திநகரைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (19), பெரும்பாக்கம் எழில் நகரைச் சோ்ந்த பாலாஜி (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா சாக்லெட், கஞ்சா ஆகியவற்றை ஆந்திரத்திலிருந்து வாங்கி வந்திருப்பது தெரியவந்தது.