தொழில்பேட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினாா்.
சிறுதொழில் வளா்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து, சென்னை சிட்கோ வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவா் பேசியதாவது: சிட்கோ தொழில்பேட்டைகளில் உள்ள காலி மனைகளை உடனடியாக தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் மனைகள் ஒதுக்கப்பட்டு, தொழில் தொடங்காத காலி மனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழில்பேட்டையில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். தொழில் மனைகளுக்கான தொகையை உரிய நேரத்தில் வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பராமரிப்புக் கட்டணங்களை வசூலித்து தொழில்பேட்டைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேச்சுவாா்த்தை!

தொழிற்சாலை மூலப்பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


