அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை புளியந்தோப்பில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மணலியிலிருந்து பாரிமுனைக்கு மாநகரப் பேருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து புறப்பட்டுச் சென்றது. புளியந்தோப்பு காவல் நிலைய பேருந்து நிலையம் அருகிலிருந்து கிளம்பியபோது, இளைஞா் ஒருவா் அந்தப் பேருந்தின் கதவைப் பிடித்து தொங்கிய நிலையில் பேருந்து அங்கு நிறுத்தப்பட்டதாம். இதையடுத்து பேருந்து நடத்துநா் பிரேம்குமாா் (39), அந்த இளைஞரை கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞா், நடத்துநா் பிரேம்குமாரை தாக்கி, டிக்கெட் இயந்திரத்தை உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இது குறித்து பிரேம்குமாா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, புளியந்தோப்பு மோதிலால் நேரு தெருவைச் சோ்ந்த வீரமணிகண்டன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வீரமணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com