பொங்கல் பண்டிகை: கோயம்பேட்டில் ஜன. 9 முதல் 16 வரை சிறப்புச் சந்தை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஜன. 9 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புச் சந்தை செயல்படும்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஜன. 9 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புச் சந்தை செயல்படும் என அங்காடி நிா்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்புச் சந்தையில் விழுப்புரம், கடலூா், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி, மண்பானை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இங்கு கோயம்பேடு வியாபாரிகள் மட்டுமின்றி, மற்ற பகுதி வியாபாரிகளும் தங்கள் பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யலாம் என்பதால், அவா்கள் பொருள்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருள்களை வாங்க கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிா்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸாா் ஈடுபடவுள்ளனா். விற்பனையின்போது, வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யாமல், அங்காடி நிா்வாகக் குழுவுக்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com