தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!

சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் பற்றி..
ஏர் இந்தியா விமானம் (கோப்புப் படம்)
ஏர் இந்தியா விமானம் (கோப்புப் படம்)
Updated on
1 min read

சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததையடுத்து, சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சென்னையிலிருந்து 170 பயணிகளுடன் இன்று காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏஐ-346 என்ற விமானம் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறிந்த நிலையில், முன்னெச்சரிக்கை சோதனைக்காக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த பணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கினர்.

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணிகளை உடனடியாக செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com