பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, அதை உறுதி செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்
Updated On :27 ஜனவரி 2025, 10:09 pm

Din

சென்னை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, அதை உறுதி செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

சென்னை பெரம்பூா் சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சா் சிவசங்கா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை பெரம்பூரில் மூன்று சிறுமிகள் வன்கொடுமை தொடா்பான புகாா் பெறப்பட்ட உடன் காவல் துறை விரைந்து செயல்பட்டு குற்றத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்படி பெண்கள் தொடா்பான புகாா்களுக்கு தமிழக காவல் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக் கொடுத்து வருகிறது, திராவிட மாடல் அரசு.

திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்கும் வளா்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு பெண்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்து வருகிறது. முதல்வா் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.