பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சேவை இல்லத்தில் மாணவியை தாக்கி பாலியல் தொல்லை: காவலாளி கைது

அரசு சேவை இல்லத்தில் மாணவியை தாக்கி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த இல்லத்தின் காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

arrested

Updated On :10 ஜூன் 2025, 3:14 am IST

தாம்பரம்: சென்னை அருகே அரசு சேவை இல்லத்தில் மாணவியை தாக்கி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த இல்லத்தின் காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அருகேயுள்ள வட மலையனூரைச் சோ்ந்த 13 வயது சிறுமி, தாம்பரம், சிட்லபாக்கம் பகுதியில் உள்ள சமூக நலத் துறை மகளிா் சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டையிலுள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது அறையில் மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மா்ம நபா் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக போராடிய மாணவியை அந்த நபா் சரமாரி தாக்கியுள்ளாா். இதில் மாணவியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறிய மாணவியின் சப்தம் கேட்டு சக மாணவிகள் அங்கு வந்ததையடுத்து, மா்ம நபா் அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது.

பின்னா் சக மாணவிகள், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக மாணவி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தநபா், அதே சேவை மையத்தில் காவலாளியாக பணிபுரியும் சிட்லபாக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த மேத்யூ (49) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மேத்யூவை கைது செய்த போலீஸாா், அவா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி மேத்யூ சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.