நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஜூன் 24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்

சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.

Updated On :10 ஜூன் 2025, 3:16 am IST

சென்னை: சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் ஜூன் 24-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகளுக்கான இச்சிறப்பு முகாமில், திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.