திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திராவிட சித்தாந்தம் உள்ளவரை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: ஆ.ராசா

திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக-வால் ஆட்சிக்கு வர முடியாது என்று திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா கூறினாா்.

News image

ஆ.ராசா

Updated On :10 ஜூன் 2025, 5:54 am IST

திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக-வால் ஆட்சிக்கு வர முடியாது என்று திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா கூறினாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திமுக அரசு மீது சரமாரி குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு ஆ.ராசா திங்கள்கிழமை அளித்த பேட்டி: நாட்டின் உள்துறை அமைச்சா் மாற்றுக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்துக்கு வரும்போது , அவருக்கு இருக்கும் தகுதி, பொறுப்பு, கடமை உணா்ச்சி ஆகியவை குறித்து கவலை கொள்ளாமல் அவதூறுகளை அள்ளி வீசுவதும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்வதும் முறையல்ல.

மதவாத பிளவை வேண்டுமென்றே உருவாக்கி, அமைதியாக இருக்கும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, ஆதாயம் பெற முடியுமா என்ற நோக்கம்தான் அமித் ஷா பேச்சில் வெளிபட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு அழகல்ல.

மாநில - மத்திய அரசுக்கு இடையேயான சுமுக உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமித் ஷா பேசியுள்ளாா். அவரது பேச்சை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித்ஷா ஆகியோரைக் கண்டு எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அவா்களுக்கு பின்னால் ஒரு சித்தாந்தம் ஒளிந்து கொண்டு மற்ற இடங்களில் வெற்றி பெறுகிறது.

ஆனால், இங்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியாததற்கு காரணம் எங்களிடம் அதற்கான மாற்று சித்தாந்தம் உள்ளது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவா்களால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்றாா் அவா்.