4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவ. 23-ஆம் தேதி சென்னையில் 49 புகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :18 நவம்பர் 2025, 2:29 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவ. 23-ஆம் தேதி சென்னையில் 49 புகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை - அரக்கோணம் இடையேவுள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவ. 23- ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நேரங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: அதேநேரம், பயணிகளின் வசதிக்காக நவ. 23-இல் காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.