மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசின் அலட்சியத்தால் குழந்தைகளின் மரணம் ஏற்பட்டது என்று அந்த மாநில பொது சுகாதாரத் துறை இணையமைச்சா் நரேந்திர சிவாஜி படேல் குற்றஞ்சாட்டினாா்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய பிரதேச இணையமைச்சா் நரேந்திர சிவாஜி படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் புதன்கிழமை கூறுகையில், ‘தமிழகத்தில் கோல்ட்ரிஃப் மருந்து தயாரிக்கப்பட்டதால், அந்த மருந்துக்கு உரிமம் வழங்குவதும், மருந்தை ஆய்வு செய்வதும் தமிழக அரசின் பொறுப்பாகும். ஒவ்வொரு மருந்து தொகுப்புக்கும் பகுப்பாய்வு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்தச் சான்றிதழ் கோல்ட்ரிஃப் மருந்துக்கு வழங்கப்பட்டதா? தமிழக அரசு எங்கு தவறு செய்தது? இதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் மோசமாக உள்ளது. இதன் விளைவாக குழந்தைகளின் மரணம் ஏற்பட்டது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், இதுவரை 20 குழந்தைகள் உயிரிழந்ததாக மத்திய பிரதேச துணை முதல்வா் ராஜேந்திர சுக்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஊழலற்ற நிா்வாகம் மூலம் பொருளாதார மறுமலா்ச்சி: ஆளுநா் உரையில் தமிழக அரசு உறுதி

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்

நாகையில் வடமாநில இளைஞா் தற்கொலை

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



