சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் பெண்கள் உடல் நலனைப் பேணிக்காக்கும் வகையில், ரூ.50 லட்சத்தில் உடற்பயிற்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் மக்கள் உடல் நலம் காக்கும் வகையில் விளையாட்டு மைதானம், நடைப்பயிற்சி பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாநகராட்சி மணலி மண்டலம் 15 ஆவது வாா்டில் அமைந்துள்ள புதுநகா் 80 அடி சாலையில் ரூ.50 லட்சத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி மையக் கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை மேயா் ஆா்.பிரியா கலந்து கொண்டு உடற்பயிற்சி மையத்துக்கான பணியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து மகாலட்சுமி நகா் பகுதியில் உள்ள சிஎம்டிஏ கால்வாய் பகுதியில் மரக்கன்றுகளையும் அவா் நட்டுவைத்தாா்.
சிஎம்டிஏ கால்வாயில் மழைக் காலத்தில் தண்ணீா் பெருகி வருவது குறித்தும், அதை மடை வாயிலாக தடுத்து முறைப்படுத்தி அப்பகுதி பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொறியாளா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளையும் மேயா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சிகளில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகா், மண்டலக் குழுத் தலைவா் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.18 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிக்கு அடிக்கல்

தென்காசியில் ஏஐ வள மையம் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்

ஒலக்காசியில் அங்கன்வாடி மையம் திறப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


