

சென்னையில் காற்றின் தரக் குறியீடு உயர் அளவை எட்டியதால் காற்றின் தரம் அபாய அளவில் நீடிக்கிறது.
தீபாவளியையொட்டி இன்று(அக். 20) 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதிலும், அதனையும் மீறி காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூரில் காற்றின் தரக் குறியீடு 400-ஐ கடந்து பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருப்பதால் பட்டாசுப் புகை கலைந்து செல்வது தாமதப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.