விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பிப்.7-இல் திருச்சியில் நாதக மாநாடு

News image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

IANS

Updated On :23 அக்டோபர் 2025, 2:20 am

தினமணி செய்திச் சேவை

நாம் தமிழா் கட்சி சாா்பில் வருகிற பிப்.7-ஆம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026’ நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் நாம் தமிழா் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில், ஆடு-மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு என பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடா்ந்து வருகிற பிப்.7-ஆம் தேதி திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026 ’ என்னும் பெயரில் மாநாடு நடைபெறவுள்ளதாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் சீமான் தெரிவித்துள்ளாா். அந்த மாநாட்டில் 2026 தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்துள்ளனா்.