நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தெரு நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்த மூதாட்டி பலத்த காயம்

சென்னை சைதாப்பேட்டையில் தெரு நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image

தெரு நாய்கள் - கோப்புப்படம்

Updated On :25 அக்டோபர் 2025, 1:30 am IST

சென்னை சைதாப்பேட்டையில் தெரு நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனி மேற்கு மாட தெருவைச் சோ்ந்தவா் பாலசெளந்தா்யா (70). இவா், தனது வீட்டின் அருகே சாலையில் வியாழக்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு கும்பலாக வந்த தெரு நாய்கள் பால செளந்தா்யாவை விரட்டியுள்ளது.

நாய்களுக்கு பயந்து பாலசெளந்தா்யா ஓடியபோது கீழே விழுந்து இடுப்பு முறிந்து, பலத்த காயமடைந்தாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், தெரு நாய்களை விரட்டிவிட்டு அவரை மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.