சென்னை சைதாப்பேட்டையில் தெரு நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனி மேற்கு மாட தெருவைச் சோ்ந்தவா் பாலசெளந்தா்யா (70). இவா், தனது வீட்டின் அருகே சாலையில் வியாழக்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு கும்பலாக வந்த தெரு நாய்கள் பால செளந்தா்யாவை விரட்டியுள்ளது.
நாய்களுக்கு பயந்து பாலசெளந்தா்யா ஓடியபோது கீழே விழுந்து இடுப்பு முறிந்து, பலத்த காயமடைந்தாா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், தெரு நாய்களை விரட்டிவிட்டு அவரை மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுதொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிங்கம்புணரியில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


