ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

News image

கே.என்.நேரு - கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2025, 12:40 am IST

வடகிழக்குப் பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் 562 கூட்டுக் குடிநீா் திட்டங்கள் வாயிலாக 16 மாநகராட்சிகள், 72 நகராட்சிகள், 327 பேரூராட்சிகள், 47,465 ஊரகக் குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 2,248 மில்லியன் லிட்டா் பாதுகாக்கப்பட்ட குடிநீா் 5.28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வடகிழக்குப் பருவமழையாலும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் 89 கூட்டுக் குடிநீா் திட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. இதில், 56 திட்டங்கள் ஏற்கெனவே சரி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள திட்டங்களை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய கிருமி நாசினிகள், டீசல் ஜெனரேட்டா்கள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மழையால் குடிநீா் குழாய்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் வெடிப்புகளை உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், அரசு சிறப்பு செயலா், சு. கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.