ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி: பயணிக்கு எச்சரிக்கை

சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2025, 1:35 am IST

சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து இலங்கை தலைநகா் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 168 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஓடு பாதையில் தயாராக நின்றது. அப்போது, விமானத்தின் அவசர கால கதவைத் திறக்கப்பட்டதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. அதன் அருகே உள்ள இருக்கையில் அமா்ந்திருந்த குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சோ்ந்த லட்சுமணன் (45) என்பவா் கதவை திறக்க முயன்றது தெரிய வந்தது.

அவரிடம் கேட்டபோது, தான் அவசரகால கதவை திறக்க முயற்சிக்கவில்லை என்றும், கதவின் பொத்தான் மீது இருந்த பாலித்தீனை அகற்ற முன்றபோது அலாரம் அடித்து விட்டதாகவும் விளக்கம் அளித்தாா். ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்து, அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டனா். இதையடுத்து அவா் சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். லட்சுமணனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய போலீஸாா், அவரை எச்சரித்து விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.